மரியா சரபோவா [ படம்: பென் சாலமன் ] |
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப்போட்டியில் அவர் அதே நாட்டைச்சேர்ந்தவரும், உலகின் 150ஆம் நிலை வீராங்கனையுமான அலெக்ஸாண்ட்ரா பனோவா வை சந்தித்தார்.
மலையும் மடுவும் மோதிக்கொள்வதைப்போல தோன்றினாலும் பனோவாவின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்ததை மறுக்க இயலாது. ஒரு கட்டத்தில் 1-6, 6-4, 4-1 என மிக முன்னிலை பெற்று, நிச்சயமாக சரபோவாவை வென்றுவிடுவார் என்று எண்ணியபோது, சரபோவானின் அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.
அதற்க்குப்பின் சுதாரித்து ஆடிய சரபோவா, பனோவாவின் அனுபவமின்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
இதனால் எப்படியும் தோற்றுவிடுவார் என அனைவரும் நினைத்த வேளையில் சரபோவா போராடி 6-1, 4-6, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, மூன்றாம் சுற்றுக்குத்தகுதி பெற்றார்.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட் நியூஸ் இந்தியாவிற்காக
No comments:
Post a Comment