Sunday 25 November 2012

உலக மகளிர் செஸ் வாகையர்: ஹரிகா வெண்கலம் வென்றார்

கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா உடன் வெள்ளை காய்களுடன் விளையாடினார். இதில் ஹரிகா சமன் செய்தார். முதல் ஆட்டத்தில் அண்டனேடா ஸ்டெஃபனோவா ஒரு புள்ளி பெற்றிருந்ததால், நேற்று பெற்ற அரைப்புள்ளியோடு,அவர் 1.5 ( 1+0.5) புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் . ஹரிகா தோல்வியை தழுவினார்.இதனால் ஹரிகா உலக வாகையர் பட்டத்தின் வெண்கலப்பதக்கத்தைக்கைப்பற்றி இருக்கிறார். வாழ்த்துகள் ஹரிகா. விரைவில் சீனாவில் சந்திக்கலாம்..

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக