நாட்டர்டாம், நெதர்லாந்து: உலக மகளிர் ஹாக்கி சுற்றுப்போட்டிகளின் 3 ஆவது போட்டியான காலிறுதியில் இந்தியா 1-8 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த
ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய மகளிர் ஆதிக்கம் செலுத்தினர். எனினும் இந்த
ஆதிக்கம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 21-வது நிமிடத்தில் ஆட்டம்
நெதர்லாந்தின் வசமானது. தொடர்ந்து அபாரமாக ஆடிய நெதர்லாந்து, 2-வது பாதி
ஆட்டத்தை முற்றிலுமாக தன் வசமாக்கியது. இதனால் அந்த அணி 8-1 என்ற கோல்
கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது.
வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் கொரியா, ஜெர்மனியையும்,
நெதர்லாந்து, நியூஸிலாந்தையும் சந்திக்கின்றன. 5 முதல் 8 வரையிலான
இடங்களுக்கான ஆட்டத்தில் இந்தியா, ஜப்பானையும், பெல்ஜியம், சிலியையும்
சந்திக்கின்றன.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக