பாரிஸ்: இந்தியாவின் சாய்னா நெஹ்வால் ஃப்ரென்ச் ஓப்பன் சூப்பர் சீரீஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அவர், ஜெர்மனியின் ஜூலியன் செங்க் ஐ 21-19, 21-8 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.இந்தப்போட்டி 36 நிமிடங்கள் நீடித்தது.
ஜீலியன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சாய்னாவிடம் தோற்றிருக்கிறார். இதற்கு முன் நடைபெற்ற டென்மார்க் ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர் சாய்னாவிடம் தோற்றுப்போனது நினைவிருக்கலாம்.
இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின் மினட்சு மிடனி உடன் மோதவிருக்கிறார்.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக