Tuesday 11 December 2012



லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஒன்பதாவது மற்றும் இறுதி  சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.

நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்  ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆட்டம் இறுதிவரை யாருக்கும் சாதகம் இல்லாமலே இருந்தது. ஆனந்த் இரண்டு முறை சமன் செய்ய விரும்பி ஒரே நகர்துதலை செய்த போதும். கார்ல்சனுக்கு அதில் விருப்பமில்லாமல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். ஆனாலும் அறுபத்தொன்றாவது நகர்துதலில் வெற்றிக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த கார்ல்சன் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள சம்மதித்தார். இந்த சமன் மூலம் ஆனந்த் ஒன்பது ஆட்டங்களில் ஒன்பது புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்தார். கார்ல்சன் பதினெட்டு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் பரிசையும் தட்டி சென்றார்.இரண்டாவது பரிசு கிராம்னிக் மற்றும் மூன்றாவது பரிசு நகாமுரா விற்கும் கிடைத்தது. 

- ராசேந்ிரடையார்
ஸ்போர்ட்ஸ் நிூஸ் இந்ியாவிற்காக