சர்வதேச கைபந்து சம்மேளன சாம்பியன்ஷிப் (ஐஎச்எஃப்) போட்டியில் இந்திய
ஆடவர், மகளிர் அணிகள் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன.
நேபாள கைபந்து சங்கம் சார்பில் நடைபெறும் இப் போட்டி அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் சனிக்கிழமை தொடங்கியது.
இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், யேமன், நேபாளம்,
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. லீக்
மற்றும் நாக் அவுட் முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.
முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவர் பிரிவில் இந்தியா
43-10 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், ஆப்கானிஸ்தான் 40-18 என்ற
புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தின.
பாகிஸ்தான் 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும், யேமன்
33-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தின. மகளிர் பிரிவு
ஆட்டங்களில் இந்தியா 39-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும்,
நேபாளம் 24-6 என்ற புள்ளிகள் கணக்கில் யேமனையும் வீழ்த்தின.
இதேபோல் வங்கதேசம் 35-15 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானையும், யேமன் 28-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின.
இப் பாட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இறுதிச்சுற்றுக்கு
முன்னேறும் அணிகள் கண்டங்களுக்கு இடையிலான ஐஎச்எஃப் போட்டியின் இரண்டாவது
சுற்றில் விளையாட நேரடித் தகுதிபெறும்.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக