ஏடிபி ஓபன் 13 டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி முன்னேறியுள்ளது.
பிரான்ஸின் மார்சேல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதியில் போபண்ணா ஜோடி 6-3, 6-7(2), 10-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடனி, கனடாவின் அடில் ஷம்ஸ்தீன் ஜோடியை வீழ்த்தியது.
இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜூலியன் நோலி, ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலஸ்க் ஜோடியுடன் மோதவுள்ளது.
இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஆஸ்திரேலியாவின் பெர்னட் டாமிக்குடன் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக