Saturday 27 October 2012

ஃப்ரென்ச் ஓப்பன் அரையிறுதியில் சாய்னா..!

சாய்னா நெஹ்வால்
பாரிஸ்:  உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை, இந்தியாவின் சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
காலிறுதிப்போட்டியில் சாய்னா, தாய்லாந்தின் ரட்சனாக் இண்தனான் உடன் மோதினார். இந்த போட்டியில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் புள்ளிக்கணக்கில் வென்றார். இந்த போட்டி நாற்பத்தொரு நிமிடங்கள் நீடித்தது. இண்தனான் இந்த ஆட்டத்தில் சாய்னாவுக்கு கடும் சவாலாக இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டிருக்கிறார் சாய்னா நெஹ்வால்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.