உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் (101), ஹாங்காங்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
இந்தியாவில் பிறந்தவரான இவர், இப்போது லண்டனில் வசித்து வருகிறார். "டர்பேனுடு டொர்னாடோ' என்று அழைக்கப்படும் ஃபுஜா சிங், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் மாரத்தான் போட்டியின் 10 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் மற்றும் 28 விநாடிகளில் கடந்தார்.
போட்டி முடிந்த பின் தனது நீண்ட பயணம் குறித்து ஃபுஜா சிங் கூறியது: இப்போது மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஓடுவதால் எந்த உடல் பாதிப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஓடும்போது நன்கு இயங்குவதாக உணர்கிறேன்.
ஆனால், இப்போது அவ்வாறு இருப்பதில்லை. ஓடும்போது சோர்வு ஏற்படுகிறது. ஓய்வு பெறும் இந்நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால், நற்பணிகளுக்கு பணம் திரட்டுவதற்காக எனது ஓட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
1999-ம் ஆண்டு முதல் ஓடத் தொடங்கிய இவர், ஆங்கிலம் பேசத் தெரியாதது வருத்தம் அளிப்பதாக ஒருமுறை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி, இவர் 102 வயதைத் தொடுகிறார். டொர்னாடோவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முழு மாரத்தான் போட்டியில் இவர் பங்கேற்றார்.
இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற அதிக வயதுடையவர் என்ற பெருமையை ஃபுஜா சிங் பெற்றார். ஆனால், முறையான பிறப்புச் சான்றிதழ் இன்மையால் இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக