ஏராவன், ஆர்மேனியா: ஆர்மேனியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சர்மா, ரஷியாவின் மகமூத் மத்யூவிடம் 9-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லலிதா பிரசாத் 8-13
என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் எல்.வி. பின்னிடம் தோல்வி கண்டார்.
இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
91 கிலோ எடைப்பிரிவில் நரேந்தர் பெர்வால் இன்று அரையிறுதியில், ஜெர்மனியின் ஃப்ளொரியன் ஸ்சூல்ஸ் ஐ எதிர்த்து களமிறங்குகிறார்.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக