கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக
மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ்
போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் முதல் போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா உடன் கருப்பு காய்களுடன் விளையாடினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹரிகா ஆட்டத்தின் 25 ஆவது நகர்த்துதலில் குதிரையை ஒரு சிப்பாய்காக இழந்தார். பின்னர் நேர நெருக்கடியும் இணைந்து கொள்ள தொடர்ந்து மோசமாக விளையாடத்தொடங்கினார். இதானால் 39 நகர்த்துதலில் ஹரிகா தோல்வியை ஒப்புக்கொள்ள நேரிட்டது. நாளை அவர் வெள்ளைக் காய்களுடன் விளையாடுவார்.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக