அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற அகலாரோவ் கோப்பைக்கான இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமன் இந்தோரா தங்கம் வென்றார்.
56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தோரா தனது இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துஜாபரோவ் அஸிஸ்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதுதான் இவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம். இவர் தேசிய ஜூனியர் நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் சிலம்பரசன் (52 கிலோ எடைப் பிரிவு), கைலாஷ் கில் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவின் அபிஷேக் பெனிவால் (81 கிலோ) வெண்கலம் வென்றார். மொத்தம் 8 பேர் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் பங்கேற்றது. அதில் 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இப்போட்டியில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இண்டைவிற்காக