|
ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் கோல் அடிக்கிறார் |
மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி 'ஏ' பிரிவில், இந்தியா தனது இரண்டாவது
போட்டியில்நியூசிலாந்து அணியை சந்தித்தது.
ஆட்டத்தின் துவக்கத்திலேயே, இந்தியாவின் ருபீந்தர் தனது வலைக்குள்ளேயே பந்தை அடித்து நியூசிலாந்துக்கு ஒரு கோல் முன்னனி கொடுத்தார். முதல் பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே பின்னடைவை சந்தித்த போதும், இந்திய இளம் வீரர்களின் ஆட்டம்,காண்பதற்க்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிகவேகமான மற்றும் தந்திரமான ஆட்டம், இந்திய ஹாக்கியின் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. இதைப்போல விளையாடித்தோற்றாலும் அது நிச்சயம் மகிழ்வூட்டுவதாகவே இருக்கும்.
ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் இந்தியாவின், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். அடுத்த நான்கு நிமிடத்தில் குர்விந்தர் சிங் மற்றொரு அற்புதமான கோல் அடித்து 2-1 என்று முன்னிலை கொடுத்தார். பின்னர் 25 ஆவது நிமிடத்தில் ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை அதிகப்படுத்தினார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் டானிஷ் முஜ்தபா மற்றொரு கோல் அடித்து 4-1 என்று அசைக்க முடியாத முன்னிலை கொடுத்தார். பின்னர் ஆட்டம் முடிவடையும் தருவாயில், 85 ஆவது நிமிடத்தில், நியூசிலாந்தின் வில்சன் ஒரு கோல் அடித்தாலும் அது ஆட்டத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. நாளை இந்தியா, ஜெர்மனியை சந்திக்கிறது.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக