Yuvaraj Singh and Suresh Raina |
மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று நாள் போட்டியில் விளையாடுவதற்க்கான "இந்தியா-ஏ" அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
இந்தியா ஏ அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆட்டம், மும்பை ப்ரபார்ன் மைதானத்தில், அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி துவங்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அணியில், இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா; ஆகிய நான்கு மிதவேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட தெரிவு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.
இந்த அணிக்கு பயிற்சியாளராக திரு. லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஷிகார் தவானின் திருமணம் நடைபெற இருப்பதால் ,அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும் தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் யுவராஜ் சிங், முரளி விஜய், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
அணி விபரம் (இந்தியா - ஏ): சுரேஷ் ரெய்னா ( தலைவர்) , முரளி விஜய், அம்பாதி ராயுடு, யுவராஜ் சிங், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி, வ்ரித்மான் சாஹா ( விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா, ராபின் பிஸ்ட், அசோக் மெனாரியா, அபினவ் முகுந்த். பயிற்சியாளர்: லால்சந்த் ராஜ்புத்.
- இராசேந்திர உடையார்..
- ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..