Saturday 8 December 2012

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஆறாவது சுற்றில் தோல்வி!

லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ எதிர்த்து வெள்ளைக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆனந்த் ஆட்டத்தின் 41 ஆவது நகர்த்துதலில் செய்த ஒரு பெரிய தவறு அவரை தோல்வி அடைய வைத்தது. அதுவரை எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எண்ணியிருந்த அவரது ரசிகர்களுக்கு அவருடைய ஆட்டம் மிகுந்த வியப்பை அளித்தது,. அதைத்தொடர்ந்து 2 நகர்த்துதல்களில் ஆனந்த் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். லண்டன் போட்டியில் ஆனந்த் அடையும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின் மூலம் ஆனந்த் 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார். ஏழாவது சுற்றில் அவர் உலகின் சிறந்த பெண் போட்டியாளர் ஜுதித் போல்கர் உடன் விளையாட இருக்கிறார். 


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக