பதிண்டா,பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.
மூன்றாவது
உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று
வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள்
அரையிறுதியில் இன்று சந்தித்தன,
அதன்படி
"ஏ' பிரிவில் முதலிடம்பெற்ற இந்தியா, பஞ்சாபின் பதிண்டாவில் நேற்று
நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 71-23 என்ற புள்ளிகள் கணக்கில்
இரானை வீழ்த்தியது.
மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தான் அணி கனடாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது, சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை சந்திக்கிறது.
அதேபோல மகளிர் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக.