துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார். துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் இகர் குனிட்ஸினை தோற்கடித்தார்.
புதன்கிழமை நடைபெறவுள்ள 2-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார் சோம்தேவ். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டினை சந்திப்பதால் சோம்தேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக