Thursday 29 November 2012

ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் : 2ஆவது சுற்றில் தீபிகா பலிக்கல்

தீபிகா பலிக்கல்
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் 2ஆவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் முன்னேறியுள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் முதல் சுற்றில் தீபிகா பலிக்கல் 7-11, 11-6, 11-1, 11-5 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லியூ லிங்கை வீழ்த்தினார். தீபிகா தனது இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் ஜென்னி டங்கால்ஃபை சந்திக்கிறார். 

ஆடவர் பிரிவு தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சித்தார்த் 6-11, 4-11, 4-11 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ரியான் சஸ்கெல்லியிடம் தோல்வி கண்டார். முன்னதாக சித்தார்த், தனது முதல் தகுதிச்சுற்றில் 11-6, 11-2, 11-5 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் அலெக்ஸ்சை  தோற்கடித்தார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 25 November 2012

உலக மகளிர் செஸ் வாகையர்: ஹரிகா வெண்கலம் வென்றார்

கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா உடன் வெள்ளை காய்களுடன் விளையாடினார். இதில் ஹரிகா சமன் செய்தார். முதல் ஆட்டத்தில் அண்டனேடா ஸ்டெஃபனோவா ஒரு புள்ளி பெற்றிருந்ததால், நேற்று பெற்ற அரைப்புள்ளியோடு,அவர் 1.5 ( 1+0.5) புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் . ஹரிகா தோல்வியை தழுவினார்.இதனால் ஹரிகா உலக வாகையர் பட்டத்தின் வெண்கலப்பதக்கத்தைக்கைப்பற்றி இருக்கிறார். வாழ்த்துகள் ஹரிகா. விரைவில் சீனாவில் சந்திக்கலாம்..

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 23 November 2012

உலக மகளிர் செஸ் வாகையர்: ஹரிகா அரையிறுதி முதல் ஆட்டத்தில் தோல்வி!

கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் முதல் போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா  உடன் கருப்பு காய்களுடன் விளையாடினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹரிகா ஆட்டத்தின் 25 ஆவது நகர்த்துதலில் குதிரையை ஒரு சிப்பாய்காக இழந்தார். பின்னர் நேர நெருக்கடியும் இணைந்து கொள்ள தொடர்ந்து மோசமாக விளையாடத்தொடங்கினார். இதானால் 39 நகர்த்துதலில் ஹரிகா தோல்வியை ஒப்புக்கொள்ள நேரிட்டது. நாளை அவர் வெள்ளைக் காய்களுடன் விளையாடுவார்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர்: நேரலை

ஹாங்காங் ஓபன்: இந்தியா ஒட்டுமொத்த தோல்வி!

கவ்லூன், ஹாங்காங்: இங்கு நடைபெற்ற உலக சீரீஸ் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து வீரர்கள், வீராங்கனைகளும் இரண்டாவது சுற்றிலேயெ தோற்று வெளியேறிவிட்டனர். இதில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சாய்னா நெஹ்வாலும் அடக்கம் என்பது வருத்தத்திற்குரியது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 22 November 2012

பன்னாட்டு சூப்பர் சீரீஸ் ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் தோல்வி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி
பெர்த், ஆஸ்திரேலியா: லான்கோ பன்னாட்டு ஒன்பது பேர் சூப்பர் சீரீஸ் ஹாக்கி போட்டிகள் இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோலாகலமாக துவங்கின. முதல் போட்டியில் புத்துணர்வு பெற்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியாவின் குர்விந்தர் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவிற்க்கு முன்னணி தந்தார், ஆனால் இங்கிலாந்தின் டேனியல் ஃபாக்ஸ் மற்றும் டேவிட் கண்டன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெற்றி பெறச்செய்தனர். இந்தியா ஆஸ்திரேலியாவை நாளையும், பாகிஸ்தானை சனிக்கிழமையும் சந்திக்க இருக்கிறது.



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். அரையிறுதிக்கு ஹரிகா தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் ஒவ்வொருவரும் தன் எதிராளியுடன் இரண்டு ஆட்டங்கள் ஆட வேண்டும். ஒன்று வெள்ளைக்காய்களுடன் மற்றொன்று கறுப்புக்காய்களுடன். இதில் நேற்று கருப்பு காய்கள்டன் ஆடிய ஹரிகா பல தவறுகள் செய்தபோதும், சீனாவின் சூ சாஓ ஆட்டத்தை சமன் செய்கிற அளவில் மோசமாக ஆடி அரை புள்ளியுடன் திருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாற்று ஆட்டத்தில் ஹரிகா வெள்ளைக்காய்களுடன் ஆடினார். ஆனால் இன்று பெரிதாக எந்த தவறையும் செய்யாமல் ஆடியதால் இரண்டாவது ஆட்டமும் சமநிலையில் முடிந்தது, எனவே, இரண்டு ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியை பெற்று சம நிலையில் இருந்தனர். அதனால் இன்று டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டி இருந்தது. முதல் ஆட்டத்தில் வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஹரிகா எளிதில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனால் இரண்டாவது ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.கறுப்பு காய்களுடன் ஆடினாலும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹரிகா 33 ஆவது நகர்த்தலில் வென்றார். இதன் மூலம் ஹரிகா உலக மகளிர் செஸ் வாகையர் பட்டத்துக்கான அரை இறுதியில், பல்கேரியாவின் அன்டொனேடா ஸ்டெஃபனாவாவை எதிர்த்து விளையாட தகுதி பெற்று இருக்கிறார். மற்றொரு அரை இறுதியில் உக்ரைனின் அன்னா உஷெனினா சீனாவின் ஜு வெஞ்ஜுனை எதிர்த்து களமிறங்குகிறார். இனிவரும் ஆட்டங்களிலாவது சிறப்பாக ஆடுவாரா ஹரிகா? பொருத்திருந்து பார்க்கலாம்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். காலிறுதியில் ஹரிகா சமன்!



த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ ஆட்டம்!
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தின் மாற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, சீனாவின் சாவோ சூ உடன் வெள்ளைக்காய்களுடன் விளையாடினார். சிறப்பான துவக்கத்தைப்பெற்ற ஹரிகா 17 வது நகர்த்துதலில் செய்த தவறால் வெற்றியை கோட்டை விட்டார். மேலும் பல தவறுகளைத்தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஹரிகா இரண்டு சிப்பாய்களை இழந்து பரிதாமாக இருந்த நிலையில், சீனாவின் சாவோ சூ செய்த சிறுபிள்ளைத்தனமான தவறு ஆட்டத்தை சமனில் முடிக்கும் வாய்ப்பை ஹரிகாவிற்க்கு கொடுத்தது. இதானால் இந்த ஆட்டம் 70 நகர்த்துதல்களில்  எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது. நாளை டை பிரேக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஹாங்காங் ஓபன் : முதல் சுற்றில் சாய்னா வெற்றி!

கவ்லூன், ஹாங்காங்: உலக சூப்பர்சீரீஸ் ஹாங்காங் ஓபன் இறகுப்பந்து போட்டி இன்று கவ்லூன் நகரில் துவங்கியது. முதல் சுற்றுப்போட்டிகளில் இந்தியாவிற்க்கு இன்று வெற்றிகள் குறைவாகவும் தோல்விகள் அதிகமாகவும் கிடைத்தன.

காலையில் முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை சீனாவின் சூ சென் மற்றும் மா ஜின் இணையிடம் 15-21, 16-21 என்ற நேர் புள்ளிகளில் , முப்பது நிமிடத்தில் தோற்றது.அடுத்து நடைபெற்ற மற்றுமொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி இணை அமெரிக்காவின் ஃபிலிப் சூவ் மற்றும் ஜெமி சுமந்தி இணையை 21-19,21-15 என்ற நேர் புள்ளிகளில், 24 நிமிடங்களில் வென்றது.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் இந்தோனேசியாவின் அப்ரில்லா யுசுந்தரியை 22-20, 21-8 என்ற நேர் புள்ளிகளில் 33 நிமிடங்களில் வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் இவர் சீனாவின் வாங் லின் உடன் நாளை மோத இருக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அருண் விஷ்ணு இணை இங்கிலாந்தின் க்ரிஸ் அட்காக் மற்றும் அண்ட்ரூ எல்லீஸ் இணையிடம் 18-21, 14-21 என்ற நேர் புள்ளிகளில் தோற்றது. இந்த ஆட்டம் சுமார் 31 நிமிடங்கள் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜயராம், சீனாவின் வாங் ஷெங்மின்னை  22-20,23-21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். 35 நிமிடங்கள் இந்தப்போட்டி நடைபெற்றது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் பாருபள்ளி, உலகின் ஏழாம் நிலை வீரர், டென்மார்க்கின் ஜேன் ஓ ஜோர்கென்சனை 24-22, 20-22, 22-20 என்ற புள்ளி கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் வென்றார். இரண்டாவது ஆட்டதில் காஷ்யப் 19-15 என்ற முன்னிலை பெற்றிருந்தபோதும் 20-22 என்ற புள்ளிக்கணக்கில் அந்த ஆட்டத்தை இழந்ததால் மூன்றாவது ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இந்த ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃப்ரான் குர்னியவன் மற்றும் செண்டி புஷ்பா இராவதி இணை இந்தியாவின் அக்ஷய் திவால்கர் மற்றும் ப்ரத்னியா கத்ரே இணையை 21-18, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ரிக்கி விடியண்ட்டோ மற்றும் புஷ்பிதா ரிசி திலி இணை இந்தியாவின் அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் இணையை 21-13, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின்  நாளைய நட்சத்திரம், பி.வி.சிந்து இந்தோனேசியாவின் பெலேட்ரிக்ஸ் மனுபுடி யிடம் 12-21,21-18,15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தோனேசியாவின் ஆல்வண்ட் யுலியண்டோ சந்த்ரா மற்றும் மார்கிஸ் கிடோ இணை இந்தியாவின் மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி இணையை 11-21,21-11,21-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் அக்சய் திவால்கர் இணை இந்தோனேசியாவின் ஹஃபிஸ் ஃபைசல் மற்றும் புத்ரா இகா ரோமா இணையை 21-16, 21-23, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத்தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையர் போட்டியில் சீனாவின் வாங் சியோலி மற்றும் யூ யங் இணை இந்தியாவின் அபர்ணா பாலன் மற்றும் சிக்கி ரெட்டியை வெறும் பதினைந்தே நிமிடங்களில் 21-3, 21-7 என்று எளிதில் வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ப்ரத்னவா கத்ரே மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை ஃப்ரான்ஸ் நாட்டின் ஆட்ரே ஃபோண்டைன் மற்றும் எமிலி லீஃபல் இணையை 21-10, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக



Tuesday 20 November 2012

ஹாங்காங் ஓபன் இன்று தொடக்கம்: சாய்னா பங்கேற்பு

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்குகிறது. 

இந்திய வீராங்கனை சாய்னா நெவால் இப் போட்டியில் பங்கேற்கிறார்.  முழங்கால் காயம் காரணமாக கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகிய சாய்னா, மீண்டும் களத்தில் குதித்துள்ளார். 

ஹாங்காங் ஓபனில் சாய்னா தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை சந்திக்கிறார். தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள சாய்னா, இதற்கு முன்னர் இருமுறை அப்ரில்லாவை வீழ்த்தியுள்ளார். 

சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள சீனாவின் யாஞ்ஜியோ ஜியாங்கை
சந்திப்பார் என்று தெரிகிறது. சாய்னாவும், ஜியாங்கும் இதற்கு முன்னர் 5 முறை மோதியுள்ளனர். அனைத்திலும் ஜியாங்கே வெற்றி கண்டுள்ளார். 

இப் போட்டியில் சாய்னா தவிர, ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூய், டென்மார்க்கின் டின் பான் உள்ளிட்டோரும் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் பி.வி.சிந்துவும் இப் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் பெலட்ரிக்ûஸ சந்திக்கிறார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப், அஜய் ஜெயராம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அக்ஷய்-பிரதன்யா, அருண்-அபர்ணா ஜோடிகள் பங்கேற்கின்றனர்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 19 November 2012

மகளிர் உலக வாகையர் செஸ்: ஹரிகா நான்காவது சுற்றுக்குத்தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா (2512) - லெலா ஜவகிஸ்விலி (2455)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியின் மாற்று ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலியாவை 47 நகர்த்துதலில் வென்றார். இதன்  மூலம் மூன்றாவது சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் ஹரிகா வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா மூன்றாவது சுற்றில் சமன் செய்தார்.!

த்ரோனவல்லி ஹரிகா
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலி இடையேயான ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில், கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் ஹம்ப்பி, முதலிடம் பெற்ற  சீனாவின் யிஃபான் ஹோ, மூன்றாமிடம் பெற்ற ஸ்லோவெனியாவின் அன்னா முஷிசுக் ஆகிய மூவரும் வெளியேறிவிட்டதால், யார் வாகையர் பட்டத்தை வெல்வார் என்பது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

தற்போதைக்கு சீனாவின் ஸாஓ சியு முன்ன்னியில் இருக்கிறார்,


-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹொர் ஹாக்கி: இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி!

ஜொஹார் பாரு, மலேசியா: இந்திய இளையோர் அணி,ஜொஹார் பாரு சுல்தான் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

சுற்றுப்போட்டிகளில் தோல்வியே அடையாமல் சிறப்பாக விளையாடிவிட்டு, இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது இந்தியா.

ஜெர்மனியின் ஜொனஸ் கொமால் ஆட்டத்தின் பதினோராவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். பின்னர் 24 வது நிமிடத்தில் இந்தியாவின் சத்பீர் சிங் ஒரு கள கோல் அடித்து அதனை சமன் செய்தார். பின்னர் 30 ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜொசுவா டெலர்பெர் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இந்த முறை கோல் அடித்தவர் ஜெர்மனியின் ஃப்ளோரியன் அட்ரியன்ஸ்.

பின்னர் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது, இந்தியாவின் ஆகாஷ் தீப் ஒரு கோல் அடித்து 3-2 என்று முன்னிலையை குறைத்தாலும், அது வெற்றிக்கோ அல்லது கூடுதல் நேரம் பெறுவதற்க்கோ உதவவில்லை.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது.


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 17 November 2012

சீன இறகுப்பந்துப்போட்டி: காலிறுதியில் காஷ்யப் தோல்வி.

சாங்காய், சீனா: முன்னாள் உலக் இளைய வாகையர், சீனாவின் வாங் ஷெங்மிங், சீன இறகுப்பந்து காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப்பை 21-17, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக
 

மகளிர் உலக ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா தோல்வி

தீபிகா பல்லிக்கல்
நைம்ஸ் ( ஃப்ரான்ஸ்) :  உலக மகளிர் அணி ஸ்குவாஸ் வாகையருக்கான காலிறுதிப்போட்டியில், இந்தியா, தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் எகிப்து அணியிடம் தோல்வியடைந்தது.
 
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை, எகிப்தின் ரனீம் எல் வெலைய்லி மற்றும் எட்டாம் நிலை வீராங்கனை நூர் எல் செர்பினி ஆகியோர் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பாவை 3-0 என்ற நேர் புள்ளிகளில் வென்று, அரை இறுதிக்கு எகிப்து அணியை தகுதி பெறச்செய்தனர்.

எகிப்து அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து, மூன்றாம் நிலை அணியான மலேசியாவை சந்திக்கிறது.

- இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

Friday 16 November 2012

சீன இறகுப்பந்து: காஷ்யப் காலிருதிக்கு தகுதி!

காஷ்யப்
சாங்காய், சீனா: சீன ஓபன் இறகுப்பந்து போட்டியின் காலிருதிச்சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப் தகுதி பெற்றிருக்கிறார். 

அவர் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில், தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருக்கும் வியட்நாமின்  டியன் மின் நுயென்னை  12-21, 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, காலிருதிச்சுற்றுக்குத்தகுதி பெற்றிருக்கிறார்.


-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹார் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா..!

ஜொஹார் பாரு, மலேசியா: சுல்தான் கோப்பைக்கான ஜொஹார் ஹாக்கியில், இன்று இந்தியா, நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்திருக்கிறது..

நான்கு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலிருக்கிறது. இதற்கு முந்திய போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளை வென்றும், பாகிஸ்தானுடன் சமன் செய்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 15 November 2012

கொனெரு ஹம்பி தோல்வி. போட்டியிலிருந்து வெளியேறினார்..

கொனெரு ஹம்பி(2610), சுகோவா நாடியாலா(2451)
கன்ட்டி மன்ஷிஸ்க், ரஷ்யா: உலக செஸ் மகளிர் வாகையர் பட்டத்திற்கான இரண்டாம் சுற்று மாற்று ஆட்டத்திலும் இந்தியாவின் கொனெரு ஹம்பி தோல்வியை தழுவியதால் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். இவர் உக்ரைனின் நாடியாலா சுகோவாவிடம் 43 நகர்த்துதலில் கருப்பு காய்களுடன் தோற்றுப்போனார், 

ஆனால் இந்தியாவின் மற்றொரு நட்சத்திரம் த்ரோனவல்லி ஹரிகா மாற்று ஆட்டத்தில் எளிதில் சமநிலை செய்து அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹார் ஹாக்கி: இந்திய- பாகிஸ்தான் ஆட்டம் சமன்..

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில், இந்தியாவிற்க்கும், பாகிஸ்தானிற்க்கும் இடையிலான ஆட்டம், எத்தரப்பிற்க்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

புதன்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியில், இறுதிவரை இரு அணிகளும் கோல் போடாததால், ஆட்டம் சமனில் முடிந்தது. முன்னதாக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 2-0 என்ற புள்ளிக்கணக்கிலும், ஜெர்மனியை 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது. இதன் மூலம் தற்போது 7 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

மற்றொரு போட்டியில் மலேசியா, நியூசிலாந்து அணியிடம் 5-2 என்ற புள்ளிக்கணக்கில் படுதோல்வி அடைந்தது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா வெற்றி! ஹம்பி தோல்வி!

GM த்ரோனவல்லி ஹரிகா (2512)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப்போட்டிகளில் இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா அர்மெனியாவின் எலினா டெனியெலியனை 33 நகர்த்துதலில் வென்றார்.

 GM கோனரு ஹம்பி (2610)
ஆனால் மற்றொரு போட்டியில், கடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்று தற்போது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோனரு ஹம்பி உக்ரைனின் ஜுகாவோ நடாலியாவிடம் 37 நகர்த்துதலில் அதிர்ச்சிச்தோல்வி அடைந்தார். அடுத்தமாற்றுப்போட்டியில் வென்றால்தான் ஹம்பி இந்த போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..


உலக மகளிர் அணி ஸ்குவாஷ்- இந்தியா காலிறுதிக்கு தகுதி..!

ஜோஸ்னா சின்னப்பா
நைம்ஸ் ( ஃப்ரான்ஸ்) :  உலக மகளிர் அணி ஸ்குவாஸ் வாகையர் போட்டியில் இன்று, இந்தியா தன்னைவிட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் நெதர்லாண்ட்ஸ் அணியை வென்று சாதனை படைத்தது.

முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அனகா, நெதர்லாந்தின்  மிலொ ஹெஜிடனை 11-8, 11-6, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அனுபவம் மிக்க, நெதர்லாந்தின் நடாலி க்ரின்ஹம் 11-8, 11-4, 11-3 என்ற புள்ளிக்கணக்கில், இந்தியாவின் தீபிகா பல்லிக்கலை வென்றதால் மூன்றாவது போட்டி மிக முக்கியத்துவம் பெற்றது. மூன்றாவது முக்கியப்போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா 5-11, 11-9, 8-11, 11-2, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்தின்
ஒர்லா நூமை அற்புதமாக வென்று இந்தியாவை காலிறுதிக்கு தகுதிபெறச்செய்தார்.

முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் ஏற்கனவே இந்தியா, அதைவிட முன்னணியில் இருக்கும் அர்ஜண்டைனா மற்றும் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

Wednesday 14 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக, கர்நாடக ஆட்டம் டிரா: தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகம், கர்நாடக அணிகளுக்கிடையேயான போட்டி டிராவானது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 168 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்த டிக்ளேர் செய்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 154 ரன்களும், அபராஜித் 112 ரன்களும் எடுத்தனர்.

கர்நாடக அணித் தரப்பில் ராஜு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய கர்நாடக அணி 4ஆம் ஆட்ட நேர முடிவில் 187.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் சேர்த்தது. கர்நாடக அணியில் அதிக பட்சமாக கணேஷ் சதீஷ் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். அவர் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். 

சிறப்பாக விளையாடிய முரளிதரன் கெüதம் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தனர். தமிழக அணித் தரப்பில் ரங்கராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்úஸ முடிவடையாத நிலையில், 4 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி ஆட்டம் டிராவானது.

தமிழக அணியை விட கர்நாடக அணி கூடுதலாக ரன்கள் எடுத்ததினால் கர்நாடகத்துக்கு 3 புள்ளிகளும், தமிழகத்துக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டன.

தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி: ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 143 ரன்களில் ஒடிசா அணி ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த தில்லி அணி 331 ரன்கள் எடுத்தது.

தனது 2ஆவது இன்னிங்ûஸத் தொடங்கிய ஒடிசா, 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் தில்லி அணிக்கு 82 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் ஆடிய தில்லி அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல் அசாம், ஜார்க்கண்ட அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அசாம் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப், மேற்கு வங்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், பஞ்சாப் அணி, இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்:
தமிழக அணி-538/4
(தினேஷ் கார்த்திக் 154*,
அபாரஜித் 112,
பிரசன்னா 74*,
சுனில் ராஜு 2வி/148)
கர்நாடக அணி-562/6
(கணேஷ் சதீஷ் 200*,
கெüதம் 130*, பவன் 69,
ரங்கராஜன் 3வி/119 )



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஜோஹர் ஹாக்கி: ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி, 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

திங்கள்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது இந்திய அணி. 

இப்போட்டியில், முன் கள வீரரான மன்தீப் சிங் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இந்திய அணி. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 10 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 538 ரன்களில் டிக்ளேர்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 168 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

சென்னையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. 

2ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பத்ரிநாத் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அபராஜித், முதல்தர கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பிரசன்னா களம்புகுந்தார். கார்த்திக்-பிரசன்னா இருவரும் சிறப்பாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வேகமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் சதமடித்தார். தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்களை எட்டியபோது டிக்ளேர் செய்தது. அப்போது தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 154, பிரசன்னா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய கர்நாடகம் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் 478: மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கனித்கர் 119, சக்சேனா 114 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.

லட்சுமண் சதம்: மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லட்சுமண் 120 ரன்களும், விகாரி 81 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய மத்தியப் பிரதேச 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி டென்னிஸ் : பூபதி-போபன்னா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

போபண்னா - மகேஸ் பூபதி
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய,  வீரர்களான மகேஸ் பூபதி - ரோஹன் போபன்னா இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூபதி - ரோஹன் இணை, தர வரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் பெலாரஸ்யன் - கனடிய மேக்ஸ் மிர்ன்யி - டேனியல் நெஸ்டர் இணையை 7-6 (5) 6-7(5) 10-5 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Friday 9 November 2012

ஆசிய இளையர் பளுதூக்கும் போட்டி:சந்திரிகா தரஃப்தர், அருணா சந்தா மற்றும் ராகுல் பதக்க வேட்டை.!!

சந்திரிகா தரஃப்தர்
சந்திரிகா தரஃப்தர்
யாங்கூன்: மியான்மரில் நடைபெற்றுவரும் ஆசிய இளைஞர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் ஆர்.வி.ராகுல் இன்று மேலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதன் மூலம், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

ஆண்கள் இளையர் 77 கிலோ எடைப்பிரிவில் ராகுல், ஸ்நாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்தப்பளுவாக 280 கிலோ தூக்கி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 

முன்னதாக ஆண்கள் இளையர் 56 கிலோ எடைப்பிரிவில் அருணா சாந்தா இரண்டு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், பெண்கள் இளையர் 44 கிலோ எடைப்பிரிவில் சந்திரிகா தரஃப்தர்  132 கிலோ மொத்தப்பளு தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர். இதன் மூலம் இந்தியா பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பீட்டர்சன் நூறு..இங்கிலாந்து 408/3..பலிக்குமா இந்தியாவின் தந்திரம்.?


அஹமதாபாத்: அரியானா அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களைப்பெற்றது. இதில் பீட்டர்சன் 110, குக் 94, நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல் ஆகியோர் அரைநூறை பெற்றனர்.

அரியானாவின் மிக மிக மோசமான பந்துவீச்சில் பயிற்சி பெறும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் உலகத்தரம் மிக்க இந்திய சுழல்பந்துவீச்சை எதிர் கொள்ளப்போகிறது என்பது சிந்தனைக்குரியது! இன்றைய அரியானா அணியின் பந்துவீச்சைப்பார்த்தபோது, எங்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள், இதை விட சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாகவே பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுவதன் நோக்கம், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி, உள்நாட்டின் காலநிலை, ஆட்டக்களம், பந்தின் வேகம் மற்றும் சுழலும் தன்மை மற்றும் இன்னும் சில நிலைமைகளை புரிந்துகொள்வதற்காகவே! ஆனால் கடந்த இரண்டு போட்டிகளையும் பார்க்கும் போது இங்கிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வாய்ப்புகளை வழங்கிவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பதாகத்தோன்றுகிறது. முதல் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் கண்ணில் கூட காட்டவில்லை. இரண்டாவது  மற்றும் மூன்றாவது போட்டியிலும், அஸ்வின், ஹர்பஜன்,பியுஸ் சாவ்லா, ப்ரக்யான் ஓஜா ஆகியோரை களமிறக்காமலே இங்கிலாந்திற்க்கு பயிற்சியளிக்கிறது இந்தியா. இதில் இங்கிலாந்து அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை படிக்க இயலாமல் போவது ஒருபக்கம் இருந்தாலும், அதேவேளையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்தின் மட்டைத்திறன் பற்றி அறியமுடியாமல் போவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் அதிரடி நூறும், அணித்தலைவர் அலிஸ்டர் குக்கின் 94 உம், நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல்லின் ஐம்பதுகளும் இங்கிலாந்து அணிக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என்பது முதல் ஐந்து நாள் போட்டி துவங்கியவுடன் தான் தெரியும். இந்தியாவின் தந்திரம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.


ஏடிபி: பயஸ் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ரோடக் ஸ்டெபனக், லியாண்டர் பயஸ்
ரோடக் ஸ்டீபனெக் -லியாண்டர் பயஸ்
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய, செக் குடியரசு வீரர்களான பயஸ்-ராடெக் ஸ்டீபனெக் இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பயஸ்-ஸ்டீபென்க் இணை, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், மார்க் லோபஸ் இணையை 7-5, 6-4 என்ற நேர் புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி 1 மணி 32 நிமிடங்கள் நீடித்தது.

இந்திய - செக் குடியரசு இணை, இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், சோணி ஓபன் மற்றும் ஷர்ங்காய் ஓபன் ஆகிய போட்டிகளில் வாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 8 November 2012

ஏடிபி: பயஸ் இணை முன்னேற்றம்

ரோடக் ஸ்டீபனெக் - லியாண்டர் பயஸ்
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய, செக் குடியரசு வீரர்களான பயஸ்-ராடெக் ஸ்டீபனெக் இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பயஸ்-ஸ்டீபென்க் இணை, பாகிஸ்தானின் குரேஷி-நெதர்லாந்தின் ஜீயன் ஜூலியன் ரோஜர் இணையை 6-4, 7-5 என்ற நேர் புள்ளிகளில் வீழ்த்தியது.கடந்த வாரம் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியாவின் பூபதி-போபண்ணா இணையிடம் குரேஷி - ஜூலியன் ரோஜர் இணை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயம் இந்திய வீரர்களான மகேஷ் பூபதி-போபன்னா இணை "பி' பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிரிட்டனின் ஜொனாதன் மர்ரே-டென்மார்க்கின் ஃபிரெடரிக் நீல்ùஸன் இணையிடம் தோல்வியைத் தழுவியது.



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Tuesday 6 November 2012

ஆசிய கோப்பை கபடி, இந்தியா இறுதிப்போட்டியை புறக்கணித்ததால் பாகிஸ்தான் வாகை.


லாஹூர்: இந்திய பயிற்ச்சியாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து,
இந்திய ஆடவர் கபடி அணி, இறுதிப்போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் அணி வாகையர் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பாரீஸ் மாஸ்டர்ஸ்: பூபதி-போபண்ணா சாம்பியன்

மஹேஷ் பூபதி -ரோஹன் போபண்ணா.

பி.என்.பி. பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் பூபதி-போபண்ணா ஜோடி கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (6), 6-3 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் குரேஷி-நெதர்லாந்தின் ஜீயன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தியது. இந்த சீசனில் பூபதி-போபண்ணா ஜோடி வென்றுள்ள இரண்டாவது பட்டம் இது. முன்னதாக துபை டென்னிஸ் போட்டியில் இந்த ஜோடி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2ஆவது முறையாக பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் போபண்ணா பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இதேபோட்டியில் பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து போபண்ணா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது


_இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி, இந்திய அணிஅறிவிப்பு


சர்வதேச ஹாக்கி சம்மேளன (எஃப்ஐஎச்) சாம்பியன்ஸ் டிராபி மற்றும் லான்கோ சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இவ்விரு போட்டிகளுக்கும் சர்தார் சிங் கேப்டனாகவும், வி.ஆர்.ரகுநாத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய பரத் சேத்ரி (கேப்டன்), குர்பஜ் சிங், சர்வன்ஜித் சிங், துஷர் காண்டேகர் உள்ளிட்ட 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

காயம் காரணமாக ஒலிம்பிக்கில் விளையாடாத இளம் வீரர் யுவராஜ் வால்மீகி, மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதேபோல் ரூபிந்தர் சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார். நிதின் திம்மையா, ஆகாஷ்தீப் சிங், ஸ்ரீஜேஷ், பி.டி.ராவ் என இரு கோல் கீப்பர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஹர்பீர் சிங், குர்மைல் சிங் என இரு புதுமுகங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர 6 மாற்று ஆட்டக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி முகாமை அடிப்படையாகக் கொண்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லான்கோ சூப்பர் சீரிஸ் ஹாக்கிப் போட்டி வரும் 22 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதைத்தொடர்ந்து எஃப்ஐஎச் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி டிசம்பர் 1 முதல் 9 வரை மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூஸிலாந்து ஆகிய அணிகளும், "பி' பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி விவரம்: ஸ்ரீஜேஷ், பி.டி.ராவ் (கோல் கீப்பர்கள்), ரகுநாத் (துணை கேப்டன்), ரூபிந்தர் பால் சிங், ஹர்பீர் சிங், சர்தார் சிங் (கேப்டன்), கோதஜித் சிங், பைரேந்திர லகரா, மன்பிரீத் சிங், குர்மைல் சிங், எஸ்.வி.சுனில், குருவிந்தர் சிங் சான்டி, டேனிஸ் முஜ்தபா, எஸ்.கே.உத்தப்பா, நிதின் திம்மையா, யுவராஜ் வால்மீகி, தரம்வீர் சிங், ஆகாஷ்தீப் சிங்.

மாற்று ஆட்டக்காரர்கள்: ஸ்ரீனிவாஸ் ராவ் (கோல் கீப்பர்), அமித் ரோஹிதாஸ், அய்யப்பா, சிங்கிளென்சனா சிங், பிரதான்ன சோமண்ணா, திம்மண்ணா.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

இங்கிலாந்து-மும்பை "ஏ' அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்தது.


இங்கிலாந்து-மும்பை "ஏ' அணிகள் இடையிலான போட்டி டிரா.
மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

மும்பை ஏ-286: இதையடுத்து பேட் செய்த மும்பை "ஏ' அணி 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 80.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. 3ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஹிகென் ஷா 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 194 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். 

இதன்பிறகு மும்பை அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. சமித் படேல், பனேசர் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற மும்பை "ஏ' அணி 101.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து தரப்பில் சமித் படேல், பனேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிரஹாம் ஆனியன்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மும்பை அணி கடைசி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து-149/2: இதையடுத்து 2ஆவது இன்னிங்ûஸ விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 24 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிக் காம்ப்டன் சிறப்பாக விளையாடி அரைசதம் கண்டார். 

மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜொனாதன் டிராட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இயான் பெல் களம் புகுந்தார். அந்த அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. அப்போது காம்ப்டன் 64, இயான் பெல் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

3ஆவது போட்டி: முன்னதாக முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய "ஏ' அணியுடன் இங்கிலாந்து அணி டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி தனது 3ஆவது மற்றும் கடைசி பயிற்சிப் போட்டியில் ஹரியாணாவைச் சந்திக்கிறது. 4 நாள்கள் நடைபெறும் இப் போட்டி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.

ஸ்டூவர்ட் பிராடுக்கு காயம்: 2ஆவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தலைமையேற்றிருந்த ஸ்டூவர்ட் பிராடுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனால் 3ஆவது நாளில் அவர் பீல்டிங் செய்தபோதிலும், பந்துவீசவில்லை. முன்னதாக 2ஆவது நாள் ஆட்டத்தின்போது அவர் 10 ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் காயமடைந்துள்ள நிலையில், தற்போது ஸ்டூவர்ட் பிராடும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

இந்திய டெஸ்ட் அணியில் ஹர்பஜன், யுவராஜ்


நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், ஹர்பஜன் சிங்கும், யுவராஜ் சிங்கும் இடம்பெற்றுள்ளனர்.

நவம்பர் மாதம் 15ம் தேதி துவங்க உள்ள இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தோனி, கம்பீர், சேவாக், சச்சின், புஜரா, கோஹ்லி, உமேஷ், ஓஜா, யுவராஜ், ஹர்பஜன், ரகானே, இஷாந்த் சர்மா, ஜாகீர் கான், தமிழக வீரர்களான அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் இடம்பெறவில்லை


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக